பவானி: சித்தோடு அருகே, மிஷின் வெடித்ததில் காயமடைந்த ஆப்பரேட்டர் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே, காந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 34; ஈரோடு, மாமரத்துபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். கடந்த மாதம், 23ல் பணியில் ஈடுபட்டிருந்த போது, பிளாஸ்டிக் உருகும் மிஷின் வெடித்ததில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE