மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, டிரான்ஸ்பார்மரில் ஆயில் திருடியதால், கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு, மக்கள் தவித்தனர்.
மொடக்குறிச்சி, வடுகப்படி பேரூராட்சி, தச்சன்காட்டுவலசில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் கருக்கட்டாம்பாளையம், கணக்குப்பிள்ளைத்தோட்டம், தச்சன்காட்டுவலசு பகுதிக்கு, மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த, 6ம் தேதி இரவு மின் தடை ஏற்பட்டது. மறுநாள் காலையில் விவசாயிகள் சென்று பார்த்தபோது, டிரான்ஸ்பார்மரில் இருந்த, 250 லிட்டர் ஆயில் திருட்டு போனது தெரிந்தது. அரச்சலூர் மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று மதியம் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் மின்தடை நீடித்தது. இந்த டிரான்ஸ்பார்மரில், மூன்றாவது முறையாக ஆயில் திருடப்பட்டுள்ளது. அரச்சலூர் போலீசில் புகாரளித்தும் பலனில்லை. மாவட்ட மின்வாரிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னதாக டிரான்ஸ்பார்மரில் ஆயிலை நிரப்பி, மின் தடையை நீக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE