தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, ஐந்து தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் யாருக்கு சாதகம், பாதகம் என, அரசியல் கட்சி வேட்பாளர்கள் கூட்டி, கழித்து கணக்கு போட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள தர்மபுரி, பென்னாகரம், பாலக் கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளில் ?மொத்தம், 71 வேட்பாளர்கள் போட்டியிட்ட னர். வெற்றி பெற வேண்டும் என, முக்கிய அரசியல் கட்சி யினர், வாக்காளர்களை சிறப் பான முறையில் அணுகினர். மேலும், வாக்காளர்களை கவனித்து வந்த, தங்களது கட்சி நிர்வாகிகளையும், தனிப்பட்ட முறையில் கவனித்தனர். இதனால், அமைச்சர் அன்பழகன் போட்டியிட்ட பாலக்கோடு தொகுதி, 87.33 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. பென்னாகரம், எட்டாவது இடத்தையும், பாப்பிரெட்டிப்பட்டி, 19வது இடத்தையும், தர்மபுரி, 40வது இடத்தையும், அரூர், 58வது இடத்தையும் பிடித்தது. இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட் பாளர்கள், ஓட்டு சதவீத பதிவு, வாக்காளர்களை கவனித்த முறையால், தங்களுக்கு பதிவான ஓட்டுகள் மற்றும் தங்கள் மீதுள்ள அதிருப்தியால் மாற்று கட்சிகளுக்கு செல்லும் ஓட்டுகள் மற்றும் ம.நீ.ம., - நா.த.க., சுயேச்சைகள் பிரிக்கும் ஓட்டுக்கள் யாருக்கு சாதகம், பாதகம் என, கூட்டி, கழித்து கணக்கு பார்த்து வருகின்றனர். மேலும், மே, 2ல் நடக் கும் ஓட்டு எண்ணிக்கை, தங்க ளுக்கு சாதகமாக இருக்கும் என, தங்களை, தாங்களே சமாதானப் படுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE