தர்மபுரி: தர்மபுரி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூதாட்டி பலியானார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தண்டுகாரன்பட்டியை சேர்ந்தவர் முருகம்மாள், 80. இவர், நேற்று முன்தினம், ஆட்டுகாரன்பட்டியிலுள்ள தன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தர்மபுரி பென்னாகரம் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகம்மாள் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த, முருகம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE