ஓசூர்: கர்நாடகா மாநில போக்குவரத்து ஊழியர்களின், காலவரையற்ற வேலைநிறுத்தத்தால், பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க, ஓசூரிலிருந்து கூடுதலாக தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
கர்நாடகா மாநில போக்குவரத்து ஊழியர்கள், நேற்று முன்தினம் முதல், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகத்துக்கு வரும் கர்நாடகா பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக எல்லையான ஓசூரிலிருந்து, பெங்களூருக்கு, தொழிலாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக, நாள்தோறும் ஏராளமானோர் பெங்களூரு சென்று வருகின்றனர். இவர்களின் சிரமத்தை தவிர்க்க, நேற்று கூடுதலாக, ஓசூரிலிருந்து, 11, சேலத்திலிருந்து, 10 அரசு பஸ்கள், பெங்களூருவுக்கு இயக்கப்பட்டன. மேலும், கர்நாடகா மாநிலத்தில், தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால், பயணிகள் பெரும் சிரமத்திலிருந்து தப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE