பள்ளிபாளையம்: குமாரபாளையம் தொகுதியில் தேர்தல் வேலையில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு திரும்பினர். குமாரபாளையம் தொகுதியில் பெரும்பாலானவர்கள் விசைத்தறி, சாய ஆலை தொழிலாளர்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பலரும் தேர்தல் பணிக்கு சென்று விட்டனர். தலைவர்கள், வேட்பாளர் வருகையின் போதும், தேர்தல் பிரசார கூட்டங்களிலும் பிரமாண்டம் காட்ட, அரசியல் கட்சியினர் அதிகளவு ஆட்களை திரட்டுவது வழக்கம். பிரதான கட்சிகள் ஆள் திரட்டுவதில் தீவிரம் காட்டினர். இதனால் பிரசாரம், கட்சி தலைவர்கள் வருகையின் போது, தொழிலாளர்களையும் கூட்டிச் சென்று விட்டனர். இதனால், 70 சதவீதம் பேர் வேலைக்கு செல்லாமல் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தற்போது, தேர்தல் முடிந்து விட்டதால், தொழிலாளர்கள் தங்கள் வழக்கமான பணிக்கு செல்ல துவக்கி விட்டனர். தற்போது இரவு, பகல் இரண்டு ஷிப்ட்டில் விசைத்தறிகள் செயல்படுவதால், விசைத்தறி தொழில், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE