ராசிபுரம்: ''கள்ளுக்கு விடுதலை கிடைக்கும் வரை, உணவுப் பட்டியலில் சேர்க்கும் வரை எங்கள் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: புதிய அரசு ஆட்சி அமைந்தவுடன் எங்கள் கள் விடுதலை மாநாடு நடத்தப்படும். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த, பா.ஜ.,நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி. அவர்களுக்கும் மாநாடுக்கு அழைப்பு விடுக்கப்படும். இலங்கையை அடுத்து இந்தியாவிலும் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில், 75 சதவீதம் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதை அவமானமாக பார்க்க வேண்டும். 1963ல் நடந்த கூட்டத்தில், கள்ளுக்கு ஆதரவாக, ஈ.வெ.ரா., பேசியுள்ளார். ஆனால், கி.வீரமணி எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. கள் சாப்பிடுவது தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் என்று நிருபித்தால், கி.வீரமணிக்கு, 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். கள்ளுக்கு விடுதலை கிடைக்கும் வரை, உணவுப் பட்டியலில் சேர்க்கும் வரை எங்கள் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE