நாமக்கல்: தமிழக சட்டசபை தேர்தல், கடந்த, 6ல் நடந்தது. நாமக்கல் மாவட்டத்திற்கு உள்பட்ட, ஆறு தொகுதிகளில், 14 லட்சத்து, 44 ஆயிரத்து, 893 வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை செலுத்த, 2,049 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அன்று நடந்த ஓட்டுப்பதிவில் மாவட்டம் முழுவதுமிருந்து, 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 972 பேர் தங்களுடைய ஓட்டுகளை செலுத்தினர். இதில், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, ஒன்பது லட்சத்து,99 ஆயிரத்து, 402 பேரும், இதர ஆவணங்களை காண்பித்து, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 846 பேரும் ஓட்டளித்துள்ளனர். ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளிலும், தலா ஒருவர், தன் வாக்கை மற்றொருவர் செலுத்தி விட்டார் என, ஆதாரப்பூர்வமாக ஆவணங்களை காண்பித்ததன் அடிப்படையில் அவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE