பெரம்பலூர்: புதிய வீட்டுக்கு வரி விதிக்க, லஞ்சம் வாங்கிய, நகராட்சி இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் அப்லோஸ், 47. இவர் பெரம்பலூர், மேட்டுத்தெருவில் வசிக்கிறார். பெரம்பலூர் ரோஸ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் புதிதாக கட்டிய வீட்டுக்கு வரி விதிக்க மனு அளித்துள்ளார். அப்லோஸ், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் மாலை, பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து, அப்லோஸிடம், 15 ஆயிரம் லஞ்சப் பணத்தை வெங்கடேசன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சப்பணத்துடன் அப்லோஸை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அப்லோஸ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE