மதுரை: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட வழக்கை ரத்து செய்ய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தாக்கல் செய்த மனுவில், சி.பி.ஐ.,யை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி அரசு மருத்துவமனை முன் 2018 மே 23ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் போராட்டம் நடந்தது. அதன் தலைவர் கமல் பங்கேற்றார். அரசுக்கு எதிராக பேசி, வெறுப்புணர்வை துாண்டி, சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக துாத்துக்குடி தெற்கு போலீசார் கமல் மீது வழக்குப் பதிந்தனர்.கமல்,'சமூக அமைதியை பாதிக்கும் வகையில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசவில்லை. என் மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை. சரியாக பரிசீலிக்காமல் உள்நோக்கில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. வழக்கை ரத்து செய்ய வேண்டும்,' என மனு செய்தார்.
மார்ச் 12 ல் விசாரணையின்போது அரசுத் தரப்பு,'வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. நீதிபதி,'வழக்கில் சி.பி.சி.ஐ.டி.,யை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்,' என்றார்.நேற்று நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். அரசுத் தரப்பு,'ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது,' என தெரிவித்தது.நீதிபதி: மனுதாரர் சி.பி.ஐ.,யை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். விசாரணை ஜூன் 3 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE