வேலூர்: வேலூரில், ரேஷன் கடைகளில், அ.தி.மு.க., கட்சி டோக்கனோடு, பணம் கேட்டு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அருகே, சத்துவாச்சாரி, 23வது வார்டிலுள்ள ரேஷன் கடைக்கு நேற்று சில பெண்கள் வந்து விற்பனையாளரிடம், அ.தி.மு.க., கட்சி சின்னமுள்ள டோக்கனை கொடுத்து, 500 ரூபாய் கேட்டனர். விற்பனையாளர் ஒன்றும் புரியாமல் விழித்தார். அப்போது, டோக்கனோடு வந்த பெண்கள், 'தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு வந்தவர்கள், இந்த டோக்கனை கொடுத்தனர். தேர்தல் முடிந்ததும் ரேஷன் கடைகளில் கொடுத்தால், 500 ரூபாய் மற்றும் 5,000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் கொடுப்பார்கள்' என, கூறியதாக தெரிவித்தனர். இது தவறான தகவல் எனக்கூறி, ரேஷன் விற்பனையாளர் மணிநாதன், 55, பெண்களை திருப்பி அனுப்பினார். இதேபோல வேலூர் சங்கரன்பாளையம், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு, பெண்கள் படையெடுத்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல், 10க்கும் மேற்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர்கள் கடையை மூடி விட்டு, ஓட்டம் பிடித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE