தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்கார் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தஞ்சாவூர் அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அம்மன்பேட்டையை சேர்ந்த முருகானந்தம்,29,. இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவிலிருந்து ஒரு பெண் காவலர் பணிக்கு வந்துள்ளார். இரவில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஓய்வு அறையில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் காவலரிடம் முருகானந்தம் கடந்த 13ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில், அய்யம்பேட்டை போலீசார் கடந்த 14ம் தேதி முருகானந்தத்தை கைது செய்து, தஞ்சாவூர் 3-ம் எண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE