சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் லாரிகள் செல்லும் நிகழ்வுகளால் சர்ச்சையானது. தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, பொன்முடி புகார் மனு அளித்தனர்.

இதன் பிறகு மூன்று பேரும் கூட்டாக அளித்த பேட்டி: வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. ராமநாதபரத்தில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகளுக்கு 31 பேர் மடிக்கணிணியுடன் சிலர் சென்றனர். மையங்களுக்கு இரவு நேரத்தில் லாரிகள் சென்றுள்ளன. அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிகளவு முறைகேடு நடக்கிறது.உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. வாக்கு எண்ணும் மையங்களில் விதிமீறல் நடக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுக்கிறார்களோ என தோன்றுகிறது. தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE