புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முப்படைகளும் தயாராக உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி ராணுவ அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து மாநில அரசுகளுடன் ராணுவ உயரதிகாரிகள் பேசியுள்ளனர்.

மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முப்படைகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருவதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர். மாநில அரசுகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரும்படி டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட ராணுவ பொதுத்துறை நிறுவனங்களுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE