தடுப்பூசி வினியோகிக்க 'டிரோன்': ஆய்வு செய்ய அரசு அனுமதி
தடுப்பூசி வினியோகிக்க 'டிரோன்': ஆய்வு செய்ய அரசு அனுமதி

தடுப்பூசி வினியோகிக்க 'டிரோன்': ஆய்வு செய்ய அரசு அனுமதி

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு, 'டிரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு, விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இந்தியாவில், மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மலைப் பிரதேசங்களில் தடுப்பூசிக்கான தேவை
தடுப்பூசி வினியோகிக்க 'டிரோன்': ஆய்வு செய்ய அரசு அனுமதி

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு, 'டிரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு, விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.



இந்தியாவில், மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மலைப் பிரதேசங்களில் தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழலில், டிரோன்களை பயன்படுத்துவது சாத்தியமா என, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதையொட்டி, விமான போக்குவரத்து அமைச்சகம், டிரோன் மூலம் தடுப்பூசி விநியோகிப்பது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.


latest tamil news


ஏற்கனவே, உத்தரகண்டில், டேராடூன், ஹரித்துவார் உள்ளிட்ட நான்கு நகரங்களில், அசையா சொத்துக்களின் தகவல்களை சேகரிக்க, டிரோன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல, ரயில் விபத்து பகுதிகளையும், ரயில்வே சொத்துக்களையும் அடையாளம் காண, மேற்கு மத்திய ரயில்வே, டிரோன் பயன்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தனியார் துறையில், வேதாந்தா குழுமத்திற்கு, அதன் கனிம வளங்களை ஆய்வு செய்ய, நிபந்தனைகளுடன் டிரோன் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (8)

23-ஏப்-202107:34:11 IST Report Abuse
ஆப்பு ஆக்சிஜனை சமையல் எரிவாயு சிலிண்டர்ல அனுப்புங்க. வீட்டிலேயே தனிமைப் படுத்திக்குவாங்க.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
23-ஏப்-202110:43:51 IST Report Abuse
கொக்கி குமாரு சிரிப்பு வரல, அடுத்து.......
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
23-ஏப்-202107:19:43 IST Report Abuse
Easwar Kamal இந்த பந்தாகளுக்கு எல்லாம் குறைச்சல் கிடையாது. தடுப்பூசியே வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. உறுப்புடைய மக்களுக்கு தேவையானாவற்றை அப்போதே மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தால் இப்போ எதுக்கு லொள் படணும்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
23-ஏப்-202107:32:36 IST Report Abuse
கொக்கி குமாரு 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி தயாரிப்பது கடலை மிட்டாய் உருட்டி கொடுப்பது போல அல்ல. அதற்குரிய காலம் ஆகும்....
Rate this:
Cancel
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
23-ஏப்-202107:13:02 IST Report Abuse
CHINTHATHIRAI கூட்டம் நீதிமன்றத்திலும் காவல் நிலையத்திலும் கூடுவதை மதுரை உயர் நீதி கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . நிபந்தனையுடன் ஜாமீன் போடுவதை சிறிது காலத்திற்கு தள்ளி வைத்தால் காவலர்களுக்கு தோற்று பாதிக்க வாய்ப்பு குறையும் . சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் அக்கறை காட்ட வேண்டும் . நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X