புதுடில்லி: டில்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர்களை, சில மாநிலங்கள் தடுப்பதாகவும், இதில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: ஆக்சிஜனை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. ஆக்சிஜன் அளவு அதிகரித்தாலும், அதனை டில்லிக்கு கொண்டு வர உதவ வேண்டும். ஆக்சிஜன் தேவைக்காக பல மாநிலங்களை டில்லி நம்பி உள்ளது. மே.வங்கம், ஒடிசாவில் இருந்து ஆயிரம் டன் ஆக்சிஜன் வர வேண்டி உள்ளது. ஆனால், டில்லிக்கு வரும் ஆக்சிஜன் டேங்கர்களை பல மாநிலங்கள் தடுக்கின்றன. இந்த பிரச்னையில் மத்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்சிஜன் பிரச்னையால், டில்லி மருத்துவமனைகள் கடும் சிக்கலில் உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பேரழிவு ஏற்படும். இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வராக இருந்தும், மக்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE