புதுடில்லி : பார்லிமென்ட் எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் கொரோனா வைரசால் சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள் திரையுலக பிரமுகர்கள் என பல தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக கொரோனா கட்டுப்பாட்டு அறையை லோக்சபா செயலகம் அமைத்துள்ளது.
இது தொடர்பாக லோக்சபா பொது செயலர் உத்பல் குமார் சிங் நேற்று பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் மருத்துவ சேவைகளை பெற பார்லிமென்ட் உறுப்பினர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அவர்களுக்காக கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான மருத்துவ சேவைகளையும் இந்த கட்டுப்பாட்டு அறை உதவியுடன் பெறலாம். இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE