நாக்பூர் : கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நோயாளியை காப்பாற்ற தன் மருத்துவமனை படுக்கையை தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்த 85 வயது முதியவர் வீட்டில் இறந்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் நாராயண் தபோல்கர் 85. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். கொரோனாவுக்கு நாக்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 40 வயது கணவருக்கு மருத்துவமனையில் படுக்கை வேண்டி பலரிடம் அவரது மனைவி கெஞ்சினார்.
இதையறிந்த தபோல்கர் டாக்டரிடம் 'எனக்கு 85 வயது. வாழ்ந்து முடித்துவிட்டேன். பெண்ணின் கணவரை காப்பாற்றுவது தான் முக்கியம். என்னை 'டிஸ்சார்ஜ்' செய்து அவருக்கு படுக்கையை வழங்குங்கள்' எனக் கூறினார்.

'உங்கள் நிலை ஆபத்தாக உள்ளது. வீட்டுக்கு செல்வது நல்லதல்ல' என டாக்டர்கள் கூறியும் தபோல்கர் தன் படுக்கையை பெண்ணின் கணவருக்கு வழங்கிவிட்டு வீடு திரும்பினார். அதன்பின் மூன்று நாட்களில் தபோல்கர் இறந்துவிட்டார். தபோல்கர் செய்த உதவியால் பெண்ணின் கணவர் பிழைத்துவிட்டார் .தபோல்கர் தியாகத்தை பலரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE