கோவிட் பாதிப்பு குழந்தைகள்; பராமரிக்கும் விதிகள் வெளியீடு

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி-கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.கொரோனாவால், 9,346 குழந்தைகள், தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 1,700க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை பறி கொடுத்துள்ளனர்.உத்தரவுஇத்தகைய குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி,

புதுடில்லி-கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.



latest tamil news

கொரோனாவால், 9,346 குழந்தைகள், தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 1,700க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை பறி கொடுத்துள்ளனர்.உத்தரவுஇத்தகைய குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர் ராம் மோகன் மிஸ்ரா, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.



அதில் கூறப்பட்டுள்ளதாவது:பெற்றோர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு, உறவுகள் ஏதுமில்லாத குழந்தைகளை பராமரிக்க, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ், தற்காலிக குழந்தை பராமரிப்பு மையங்களை, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, குழந்தைகளை பராமரிக்கும் நம்பிக்கைக்குரியவரின் விபரங்களை பெறும்படி, மருத்துவமனைகளுக்கு, அரசு உத்தரவிட வேண்டும்.



பெற்றோரின் நிலையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, மன நல மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவதற்கு, உதவி தொலைபேசி எண் வசதியை ஏற்படுத்த வேண்டும்.கலெக்டர்கள், மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு வசதிகளை கண்காணிக்க வேண்டும்.


latest tamil news

பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்ப சொத்துக்களின் விற்பனை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தடுக்க வேண்டும். இதற்கு பத்திரப் பதிவு அலுவலகம் அல்லது வருவாய் துறை வாயிலாக உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.பாதுகாப்புகொரோனாவால் அனாதையான குழந்தைகள் குறித்த விபரங்களை, நகர்ப்புறம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும்.



மேலும், இந்நிர்வாகங்களிடம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு அறிவித்துஉள்ள திட்டங்களை விளக்கி, உரிய பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
04-ஜூன்-202107:20:59 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நல்ல எண்ணம் வாழ்க இப்போ தமிழகம் மாதிரியான இடங்களில் கொரனா தொற்றை குறைத்து காண்பிக்க வேறு பெயரில் மரண சர்டிபிகேட் கொடுத்து விடுறாங்களே அப்போ தவிக்கும் குழந்தைகளுக்கு இந்த விதி பொறுந்துமா
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
04-ஜூன்-202107:19:59 IST Report Abuse
SKANDH புரட்சி தலைவி அம்மாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை ஆராயுங்க அதன் குறிக்கோளை இந்த நிலைமைக்கு ஆராய்ந்து விரிவு படுத்துங்க.அந்த திட்டத்துக்கு ஈடாக உலகிலேயே ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் இதுவரை ஒன்றில்லை.அம்மா புகழே வாழ்க. அம்மா நாமமே வாழ்க.
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
04-ஜூன்-202106:06:59 IST Report Abuse
Fastrack கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் ஏகப்பட்ட முரண்பாடுகள் ...தாயை மட்டும் இழந்த குழந்தைகள் ..வீட்டை நடத்தும் குடும்பத்தலைவரை இழந்த குழந்தைகள் என்று கணக்குகள் ...அரசாங்கம் உண்மையான கணக்கு தெரியாமல் அரசியல் செய்வதாகவே தெரிகிறது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X