கடலுார்-கடலுார் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்த 15 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 50 ஆயிரத்து 932 பேர். நேற்று 590 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 574 பேர் குணமடைந்ததால், இது வரை 45 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 4,519 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.மாவட்டத்தில் தொற்று பாதித்து நேற்று முன்தினம் வரை 561 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர்.நெய்வேலியை சேர்ந்த 60 வயது பெண், 43 வயது நபர், கடலுாரை சேர்ந்த 56 வயது நபர் மற்றும் 48 வயது பெண், பண்ருட்டியை சேர்ந்த 78 வயது முதியவர், அண்ணாகிராமத்தை சேர்ந்த 54 வயது பெண், விருத்தாசலத்தை சேர்ந்த 74 வயது முதியவர் மற்றும் 50 வயது நபர், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணி பெண் மற்றும் 68 வயது முதியவர், 38 வயது பெண், கீரப்பாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, மங்களூரை சேர்ந்த 54 வயது நபர் மற்றும் 62 வயது மூதாட்டி, குமராட்சியை சேர்ந்த 58 வயது நபர் ஆகியோர் இறந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 183 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE