புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சம் பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 89 லட்சத்து 09 ஆயிரமாக பதிவானது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,74,399 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 14.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,49,186 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 93.94 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.21 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 4.85 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி

சோதனைகள்
இந்தியாவில் நேற்று (ஜூன் 6) ஒரே நாளில் 15,87,589 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 36 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

உலக பாதிப்பு
இன்று (ஜூன் 7-ம் தேதி) காலை 10:10 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 17 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 லட்சத்து 44 ஆயிரத்து 029 பேர் பலியாகினர். 15 கோடியே 70 லட்சத்து 64 ஆயிரத்து 600 பேர் மீண்டனர்.