சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 16,811 பேரும் மற்ற மாநிலத்தவர் இருவரையும் சேர்த்து 16,813 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 358 பேர் உயிரிழந்து உள்ளனர். 32,049 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 29 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 81,920 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 16,813 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,08,838 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,94,25,279 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 9,278 பேர் ஆண்கள், 7,535 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,53,435 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,55,365 ஆகவும் அதிகரித்து உள்ளது. 32,049 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,91,646 ஆக உயர்ந்தது.
358 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 135 பேர் தனியார் மருத்துவமனையிலும், 223 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,528 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE