விழுப்புரம்-கோர்ட் சொத்து வைப்பறையில் இருந்த மதுபாட்டில்கள் காணாமல்போனது தொடர்பாக, தலைமை எழுத்தர் மீது போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் சையத் ஹாசன்; இவரிடம், நீதிமன்ற வழக்கு சொத்து மற்றும் சொத்துக்களின் வைப்பறை சாவி உள்ளது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நீதிபதி பூர்ணிமா, வைப்பறையில் ஆய்வு செய்தார். அப்போது, கண்டமங்கலம் மற்றும் கெடார் போலீஸ் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்து வைத்திருந்த 22 மதுபாட்டில்கள் மாயமானது தெரியவந்தது.இது குறித்து நேற்று அளித்த புகாரின்பேரில், சையத் ஹாசன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இவர் மீது கண்டமங்கலம், விக்கிரவாண்டி போலீஸ் நிலைய வழக்குகளில் 620 மதுபாட்டில்கள் மாயமானது தொடர்பாக கடந்த 4ம் தேதி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE