சென்னை: தமிழகத்தில் 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 22.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் தொற்று பரவல் 2வது அலை தீவிரமாக பரவியதால், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தின. இந்தியா முழுவதும் இதுவரை 24.6 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மிகக் குறைவாக கோவிட் தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களுள் ஒன்றான தமிழகத்தில் துவக்கத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததே குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தியதற்கான காரணமாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 4.57 லட்சம் பேரும், மார்ச்சில் 2 லட்சம் பேரும், மே மாதத்தில் 30 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் 22.5 சதவீதம் பேரும், குஜராத்தில் 20.5 சதவீதம் பேரும் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE