சென்னை: குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்று கொண்ட பின்னர் சைலேந்திர பாபு கூறினார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., ஆக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இன்று (ஜூன் 30) அவர் பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: காவல்துறையின் தலைமை பொறுப்பை ஏற்பது அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்து, விரிவாக விசாரணை நடத்தி, அதற்கு முடிவு கண்டு முதல்வருக்கு அறிக்கை அனுப்பி வைப்போம்.
மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடனும், மனித நேயத்துடனும் நடக்க வேண்டும். இதற்காக போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். போலீசார் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்திரிகை, மீடியா துறையினர் உதவ வேண்டும். இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE