புதுடில்லி: இந்தியாவில் தற்போது தடுப்பு மருந்து விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இதுகுறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். ஜூலை மாதத்துக்கான தடுப்புமருந்து இன்னும் இந்தியா வந்து சேரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
जुलाई आ गया है, वैक्सीन नहीं आयीं।#WhereAreVaccinesதடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக, தலைவர்கள் பொறுப்பற்ற கருத்துகளை கூறுவதை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டித்திருந்தார். ஜூன் மாதம் 11.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன; ஜூலையில் 12 கோடி டோஸ் வழங்கப்படும் என விளக்கமளித்திருந்தார். உடனே ராகுல், ஜூலை வந்து விட்டது; எங்கே தடுப்பூசிகள்? என மத்திய அரசை குறைகூறும் விதமாக, ட்வீட் போட்டார். அதற்கு ஹர்ஷ் வர்தன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.— Rahul Gandhi (@RahulGandhi) July 2, 2021
இதற்கு பதிலளித்த ஹர்ஷவர்தன், 'ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கனவே தரவுகளை வெளியிட்டு இருந்தேன். ராகுலுக்கு பிரச்னைதான் என்ன? அவர் அந்த தரவுகளை பார்க்கவில்லையா? திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது என்று காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Just yesterday, I put out facts on vaccine availability for the month of July.
What is @RahulGandhi Ji's problem ?Does he not read ?
Does he not understand ?
There is no vaccine for the virus of arrogance and ignorance !!@INCIndia must think of a leadership overhaul ! https://t.co/jFX60jM15w
— Dr Harsh Vardhan (@drharshvardhan) July 2, 2021

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஜூலை மாதம் 12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். தனியார் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகம் செய்யப்படும். தடுப்பூசி குறித்து 15 நாட்களுக்கு முன்னரே மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தில், வெற்று அரசியல் சரியானது அல்ல என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE