சமீபத்தில் நடந்து முடிந்த மே.வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜியை பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். இந்த வெற்றியை எதிர்த்து கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் மம்தா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு, நீதிபதி கவுசிக் சந்தா முன்பு விசாரணைக்கு வந்தது. அவருக்கு பா.ஜ., தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால், வழக்கு விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கும். வெளிப்படைத்தன்மையுடன் இருக்காது எனக்கூறி தலைமை நீதிபதிக்கு மம்தா கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்த நீதிபதி கவுசிக் சந்தா, நீதித்துறையை அவமானப்படுத்த திட்டமிட்டு மம்தா நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது செயல்கள், அரசியல்சாசனத்தில் தெரிவிக்கப்பட்ட கடமையில் இருந்து மீறியதாக கூறியதுடன், அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE