மத்திய அமைச்சராக முருகன் நியமனம் ஏன்?

Updated : ஜூலை 08, 2021 | Added : ஜூலை 08, 2021 | கருத்துகள் (49) | |
Advertisement
நாமக்கல் மாவட்டம், கோனானுாரை சேர்ந்தவர் முருகன், 44. இவர், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லுாரியில் சட்ட படிப்பை முடித்த பின், சென்னை உயர் நீதிமன்றத்தில், 15 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர். சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்த முருகன், தமிழக பா.ஜ.,வின், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய துணை
BJP, Murugan, L Murugan

நாமக்கல் மாவட்டம், கோனானுாரை சேர்ந்தவர் முருகன், 44. இவர், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லுாரியில் சட்ட படிப்பை முடித்த பின், சென்னை உயர் நீதிமன்றத்தில், 15 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர். சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.



ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்த முருகன், தமிழக பா.ஜ.,வின், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய துணை தலைவராக, 2017 முதல், 2020 வரை, பதவி வகித்துள்ளார்.இந்தப் பதவியில் இருந்தபோதுதான், 2020 மார்ச்சில், தமிழக பா.ஜ., தலைவராக முருகன் நியமிக்கப்பட்டார். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த முருகனை, கட்சியின் மாநில தலைவராக நியமித்தது, பல தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுத் தந்தது.



latest tamil news

இவர், 15 மாதங்களாக தமிழக தலைவராக செயல்பட்டு வந்தார். இவருடைய தலைமையின் கீழ் தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், எம்.பி.,யாக இல்லாத முருகன், நேற்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.



தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட இல்லாவிட்டாலும், இம்மாநிலம் சார்பாக, மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில், முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், அருந்தியர் சமூகத்தை சேர்ந்த முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமை முருகனுக்கு கிடைத்துள்ளது.



இது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மீது, பிரதமர் நரேந்திர மோடி அளப்பறிய பற்று வைத்திருப்பதை காட்டுவதாக, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர். இவர், விரைவில், பா.ஜ., ஆளும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.



-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (49)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஜூலை-202105:28:31 IST Report Abuse
J.V. Iyer பாஜக கட்சி எல்லா மக்களுக்குத்தான். பிரிவினைவாதிகள்தான் குழப்பி சேரை வாரி இறைக்கின்றனர்.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
08-ஜூலை-202122:14:41 IST Report Abuse
Gnanam இனிமேலாவது மனித இனத்தை தாழ்த்தப்பட்ட அல்லது உயர்சாதி வகுப்பை சேர்ந்தவர்கள் என்று பிரித்து சொல்லாதிருப்பது நன்மை பயக்கும். ஆண் சாதி, பெண் சாதி என்ற இரண்டு சாதிகள் போதும் இந்த மனிதகுலத்திற்கு. எந்த தொழிலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆகவே சாதி வேறுபாடு இனிமேல் கிடையாது.
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-202118:20:12 IST Report Abuse
Easwar Kamal தமிழ் தாய்மொழி இலாதவனானுகளுக்கு தன முன்னுரிமை கொடுப்பானுங்க. முருகன் தாய்மொழி தெலுங்கு அதனால் உறுதிமொழி தெலுங்கில் எடுத்தார். இவருக்கு ஆந்திராவோ இல்லை தெலுங்கானாவில் இருந்து தேர்ந்து எடுக்கலாம். யாரும் தமிழகதுக்கு எந்த உதவியும் செய்யமாட்டானுவ இங்கே இருந்து எல்லா சலுகைகளும் வாங்கி வேற மாநிலத்துக்கு போய் உதவி செய்வானுவ. கர்நாடகால ஆணை கட்டுவதை கேள்வி கேட்டதுடுக்கு வய திறக்கலை இப்போ துணை மந்திரி வேற அயாச்சு ஒரு வார்த்தை வெளியில வராது. இதுக்கு ஆகவேண்டியே கர்நாடகாவில் இருந்து கூட மாநிலங்களுக்கு அனுப்பலாம். இது எல்லாம் பிஜேபியின் பிளான்.
Rate this:
subbu - Chennai,இந்தியா
08-ஜூலை-202121:38:03 IST Report Abuse
subbuநீர் பெரிய விஞ்ஞானியோ ? முருகன் ஒரு தமிழர். இதில் எந்த மாற்று கருதும் இருக்க முடியாது. உன்னை போல உப்பிஸ்களெல்லாம் இப்படிதான் நினைப்பார்கள். கலைஞர் மட்டும் என்ன தமிழரா. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தவங்க தானே நீங்க. உங்களுக்கெல்லாம் தமிழனை பத்தி பேச எந்த தகுதியும் கிடையாது...
Rate this:
வாழ்க பாரத தேசம்நியுயார்க்கில் இருந்து கொண்டு தமிழர் தெலுங்கர்ன்னு பிரித்தாலும் சூழ்ச்சியை தயவு செய்து செய்யாதீர்கள்...
Rate this:
Raman - kottambatti,இந்தியா
10-ஜூலை-202116:34:47 IST Report Abuse
Ramanஉண்மையை சொன்னால் ஏன் பிடிப்பதில்லை.? டிசைன் அப்படியோ?. ஹி ஹி ஹி...
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
11-ஜூலை-202110:05:50 IST Report Abuse
SKANDH கருணாநிதியும் ஸ்டாலினும் தெலுங்கர் என்ற உண்மையையும் சேர்த்தே சொல்லேன்.ஹி ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X