பியாங்யங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாளுக்குநாள் உடல் எடை குறைந்த வண்ணம் உள்ளார் என தென் கொரிய ஊடகங்கள் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகின்றன. அவருக்கு நீரிழிவு நோய்த் தாக்கி உள்ளதாகவும் இதனால் அவர் விரைவில் பதவி விலக உள்ளதாகவும் பலவித செய்திகள் உலா வருகின்றன. ஆனால் இருண்ட நாடான வடகொரியாவில் என்ன நடந்தாலும் அது வெளியுலகத்துக்கு தெரியாது. குறிப்பாக சர்வதேச ஊடகங்களின் பார்வைக்கு வருவது மிகக் கடினம்.

இதுகுறித்து தென் கொரியாவின் உளவு நிறுவனத் தலைவர் கிம் யுங் கீ கூறியதாவது: கிம் ஜாங் உன் பத்திலிருந்து இருபது கிலோவரை எடை குறைந்து உள்ளார். அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பெரிய நோய் எதுவும் இல்லை. கிம் ஜாங் உன் உடலுக்கு தீவிர உடல் சோர்வு அல்லது பாதிப்பு ஏற்பட்டால் வெளிநாட்டில் இருந்து மருந்துகள் ஏற்றுமதியாகும். ஆனால் வடகொரிய அரசு அவ்வாறு எதுவும் இறக்குமதி செய்யவில்லை. மேலும் தற்போதுகூட கிம் ஜாங் உன் பல மணிநேரம் அரசின் முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். கிம் ஜாங் உன் பரம்பரைக்கே இதய நோய் தாக்கம் உள்ளது. உடல் பருமன் காரணமாக கிம் ஜாங் உன் 140 கிலோ எடைவரை சென்றது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதத்தில் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே உள்ள வர்த்தகம் 81 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் பயிர்கள் சேதம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக என்றும் ஏற்கனவே கிம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.