
விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த், வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது, கோவிட் நிவாரண நிதிக்கான காசோலையை விஜயகாந்த் வழங்கினார். அதனை ஸ்டாலின் பெற்று கொண்டார். இந்த சந்திப்பின் போது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் இரண்டு மகன்களும் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்தும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. ஆனால், விஜயகாந்த் உடல்நலம் பற்றி முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE