காளையார்கோவில்: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக கிண்டலாக பதில் சொல்கிறார் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது:
தமிழகம் பிரிக்கப்பட போகிறது என்று பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தெரிவிக்கவில்லை. ஒன்றியம் என கூறி வருபவர்கள் தான் வதந்தி பரப்பி வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., க்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றவர்கள் அதை செய்யவில்லை. அது குறித்து கேட்டால் 'தேதியை சொன்னோமா' என நிதியமைச்சர் கிண்டலாக பதில் சொல்கிறார்.

லியோனியை தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் தலைவராக நியமித்திருப்பது தமிழக ஒருமைப்பாட்டை குலைக்கும் செயல், ஜெய்ஹிந்த் என்ற கோஷம் தமிழகத்தில் இருந்து எழுப்பப்பட்டது. இதனை கொச்சைப்படுத்தி பேசுவதை எப்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என தெரியவில்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE