சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 2,652 கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 36 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,104 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 52 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 61 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 40,463 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 2,652 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,21,438 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,46,86,755 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,518 பேர் ஆண்கள், 1,134 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,73,400 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,48,000 ஆகவும் அதிகரித்து உள்ளது. 3,104 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,56,165 ஆக உயர்ந்துள்ளது.
36 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 12 பேர் தனியார் மருத்துவமனை யிலும், 24 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,454 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்

