தடுப்பூசி விவகாரத்தில் வெற்று பெருமை எதற்கு? ப.சிதம்பரம் கேள்வி| Dinamalar

தடுப்பூசி விவகாரத்தில் வெற்று பெருமை எதற்கு? ப.சிதம்பரம் கேள்வி

Updated : ஜூலை 13, 2021 | Added : ஜூலை 13, 2021 | கருத்துகள் (69) | |
புதுடில்லி: கோவிட் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், தடுப்பூசி உற்பத்தித்

புதுடில்லி: கோவிட் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.



latest tamil news

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:
நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், தடுப்பூசி உற்பத்தித் திறன் மிகைப்படுத்தப்படுகிறது; தடுப்பூசி இறக்குமதி மர்மமாகவே உள்ளது. 'நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்' என்பது, மத்திய அரசின் வெற்றுப் பெருமை அறிவிப்பு.




latest tamil news

தடுப்பூசி குறித்த உண்மைகளையும், டில்லி, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டு உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X