சென்னை : 'தென் ஆப்பிரிக்காவில் கலவரம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களுக்கு, தகுந்த பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவரது அறிக்கை:
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'கொரோனா காலத்தில் சிறையில் அடைத்து, என்னை கொல்ல முயல்கின்றனர்; எனவே, நான் கைதாக மாட்டேன்' என, அவர் அறிவித்தார்.தண்டனையை ஒத்தி வைக்கக்கோரிய அவரது மனுவை நீதிமன்றம் ஏற்காததால், ஜூலை, 7ம்தேதி இரவு கைதானார்.
அவரை விடுவிக்கக்கோரி, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தாக்குதல்களால், அந்நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, அச்சத்தின் பிடியில் உள்ள தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு, தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE