பிரான்மலை : சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் நர்சுகள் மருத்துவப் பணிகளுக்கிடையே குரங்குகளோடு போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.
இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் திரிகின்றன. மலையடிவாரம் என்பதால் இக்கிராமத்தில் ஏராளமான குரங்குகள் பல ஆண்டுகளாக வசிக்கின்றன. கடைகள், வீடுகளில் உணவு பொருட்களை எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக தங்கியுள்ள குரங்குகளை விரட்ட செவிலியர்கள் சிரமப்படுகின்றனர்.
மருத்துவமனைக்குள் குரங்குகள் வராத அளவில் ஜன்னல்களில் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் வாசல் வழியாக உள்ளே வந்து விடுகின்றன. எந்நேரமும் குரங்குகள் மீது கண் வைத்து காத்திருக்க வேண்டியுள்ளது. குரங்குகளால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், குழந்தைகள் பயத்துடன் வந்து செல்கின்றனர். வனத்துறையினர் குரங்குகளை பிடித்து அவற்றிற்கு உணவு தண்ணீர் கிடைக்கக்கூடிய வேறு இடத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE