மானாமதுரை : மானாமதுரை அருகே கட்டிக்குளத்தை சுற்றியுள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கட்டிக்குளம், கொம்புகாரனேந்தல், சவேரியார்பட்டணம், பெரும்பச்சேரி, மேலமேல்குடி, தீத்தான்பேட்டை, குவளைவேலி, நாராயணதேவன்பட்டி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ராஜகம்பீரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் நடக்கிறது. கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி நடக்கிறது.
தினமும் காலை 10:00 மணிக்கு மின்வெட்டு செய்து பல மணி நேரத்திற்கு பின்னரே வினியோகம் செய்கின்றனர். இதனால் வயல்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி வருகின்றன. வீடுகளில் மின் வினியோகம் இன்றி அன்றாட பணிகளை செய்யமுடியவில்லை.
கட்டிக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்நேசன் கூறியதாவது இப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது குறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE