சென்னை:கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
அதேநேரத்தில், வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில், கன மழை பெய்யலாம். இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மாவட்டங்களுக்கு செல்வோர் கவனமாக இருக்க வேண்டும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்ேட்டை, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். தாழ்வுப்பகுதிவடமேற்கு வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.
இதன் காரணமாக, தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.கர்நாடகா, கேரளா, லட் சத்தீவை ஒட்டிய கடலோர பகுதிகளிலும், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE