சிக்கிம், ஐதராபாத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு சிக்கிமிலும், இன்று அதிகாலை ஐதராபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு 8:39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த

புதுடில்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு சிக்கிமிலும், இன்று அதிகாலை ஐதராபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



latest tamil news


இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு 8:39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.


latest tamil news


இதேபோல் ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 5:00 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X