" வெல்ல முடியவில்லையே " - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வருத்தம்
" வெல்ல முடியவில்லையே " - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வருத்தம்

" வெல்ல முடியவில்லையே " - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வருத்தம்

Updated : ஜூலை 26, 2021 | Added : ஜூலை 26, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனையான சி.ஏ.பவானி தேவி 2வது சுற்றில் போராடி தோல்வியுற்றார். இதற்கு அவர், ‛நான் என் நிலையை சிறப்பாக செய்தும் வெல்ல முடியவில்லை, என்னை மன்னிக்கவும்,' எனக் கூறியுள்ளார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தைச்
" வெல்ல முடியவில்லையே " - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வருத்தம்

புதுடில்லி: ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனையான சி.ஏ.பவானி தேவி 2வது சுற்றில் போராடி தோல்வியுற்றார். இதற்கு அவர், ‛நான் என் நிலையை சிறப்பாக செய்தும் வெல்ல முடியவில்லை, என்னை மன்னிக்கவும்,' எனக் கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ள பவானி தேவி, முதல் சுற்றில் துனிசியாவின் நாதியா பென் அஸிஸி உடன் மோதினார். அதிரடி காட்டிய பவானி, 15 -3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிப்பெற்று டேபிள் ஆப் 32 சுற்றுக்கு தகுதிப்பெற்று சாதனைப் படைத்தார்.



latest tamil news


இரண்டாவது சுற்றில் பவானி தேவிக்கு உலகின் 3ம் நிலை வீராங்கனையான பிரான்சின் மேனோன் புரூனட்டை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. எனினும் நம்பிக்கையோடு போட்டியைத் துவங்கிய பவானிக்கு, புரூனட் கடும் சவால் கொடுத்தார். இறுதியில் 7 -15 என்ற புள்ளிக்கணக்கில் பவானி தேவி 2வது சுற்றில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் முதல்முறையாக தேர்வானது மட்டுமின்றி 2வது சுற்று வரை முன்னேறிய பவானி தேவிக்கு பலரும் ஆறுதல் கலந்த பாராட்டுகளை தெரிவித்தனர்.



latest tamil news


இது தொடர்பாக பவானி தேவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: மிகப்பெரிய நாள்.. உற்சாகமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது. முதல் போட்டியில் 15-3 என வென்று, ஒலிம்பிக்கில் வாள்வீச்சில் வென்ற முதல் இந்தியராக ஆனேன். 2வது போட்டியில் உலகின் 3ம் வீராங்கனையுடன் 7-15 என தோற்றேன். நான் என் நிலையை சிறப்பாக செய்தும் வெல்ல முடியவில்லை. என்னை மன்னிக்கவும். ஒவ்வொரு முடிவிலும் ஒரு துவக்கம் இருக்கிறது. நான் எனது பயிற்சியை தொடர்வேன்.



நிச்சயமாக பிரான்சில் நடைபெறும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று என் நாட்டை பெருமைப்படுத்த கடுமையாக உழைப்பேன். எனக்கு ஆதரவாக நின்ற ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மிக்க நன்றி நான் உங்கள் அனைத்து பிரார்த்தனைகளுடன் அடுத்த ஒலிம்பிக்கில் மிகவும் வலுவாகவும் வெற்றிகரமாகவும் வருவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

ganapati sb - coimbatore,இந்தியா
27-ஜூலை-202111:19:29 IST Report Abuse
ganapati sb முதன்முறையாக இந்தியாவிலிருந்து தகுதி பெற்று முதல் சுற்றில் வென்றதே சிறப்பான சாதனையின் துவக்கம்தான். சென்ற ஒலிம்பிக்கில் தோற்று அனுபவம் பெற்ற மீரா இந்த ஒலிம்பிக்கில் வென்றது போல இந்த ஒலிம்பிக்கில் இரண்டாம் சுற்றில் தோற்று அணுபவம் பெற்ற பவானி அடுத்த ஒலிம்பிக்கில் கட்டாயம் வெல்வார் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Vela - Kanchipuram,இந்தியா
27-ஜூலை-202107:01:24 IST Report Abuse
Vela Great Job you did, if you loose you might be learning lots of technics and eager to do further more, try practicing internationally you will win next turn. All the best.
Rate this:
Cancel
26-ஜூலை-202123:27:16 IST Report Abuse
அப்புசாமி வீரர்களை உற்சாகப் படுத்துறேன் பேர்வழின்னுட்டு அவிங்களை உசுப்பேத்தி டென்சன் பண்ணுறாங்க. வீரர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகி முழுத்திறனையும் காமிக்க முடியாம போய்விடுகிறது. தகவர்கள் அடக்கி வாசிக்ஜணும். இல்லேன்னா, இஸ்ரோ வுல ஊத்திக்கிட்ட மாதிரி ஆயிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X