அன்னுார்:எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், ரூ.2.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம் உள்பட ஏழு ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய அலுவலக கட்டடம் சேதமானதால், 2019ல் இடித்து அகற்றப்பட்டது. 2.75 கோடி மதிப்பில் கட்டுமானப் பணி துவங்கி முடிந்து விட்டது. எனினும், பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.இதனால், ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெவ்வேறு சிறிய கட்டடங்களில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பொறியியல் பிரிவு, திட்டப் பிரிவு, வளர்ச்சி பிரிவு அதிகாரிகள், சிறிய வெவ்வேறு அறைகளில், இரண்டு ஆண்டுகளாக சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு, பல்வேறு கோரிக்கைகள், சான்றுகள் மற்றும் அங்கீகாரத்திற்கு வரும் பொதுமக்கள், திசைக்கு ஒன்றாக உள்ள சிறிய அறை அலுவலகங்களுக்கு சென்று சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 'ஒன்றிய அலுவலக கட்டுமான பணி முடிந்ததால், விரைவில் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE