சூலுார்:மாதக்கணக்கில் காத்திருந்த மாதப்பூர், ராசிபாளையம் மக்கள், தடுப்பூசி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.சூலுார் வட்டாரத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில், கரவளி மாதப்பூர், ராசிபாளையம் ஊராட்சிகளை தவிர்த்து, 15 ஊராட்சிகளில், சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மேற்கண்ட இரு ஊராட்சிகளில் மட்டும் முகாம் நடத்தப்படவில்லை. இதனால், மக்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.ஊராட்சி தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தனர். அப்போதும் தடுப்பூசி வரவில்லை. இதற்கிடையில், போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், சுறுசுறுப்படைந்த சுகாதாரத்துறையினர், இரு ஊராட்சிகளிலும் நேற்று முன்தினம் சிறப்பு முகாம்களை நடத்தினர்.மொத்தம், 500 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. மாதக்கணக்கில் காத்திருந்த மக்கள், ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE