அன்னுார்:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, காட்டம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், அவரது உருவப்படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வேம்பு, பூவரசன், நாவல், தேக்கு உட்பட 50 மரக்கன்றுகள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.ஊராட்சி தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் மதியழகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.* சிறுமுகை அடுத்த ரேயான்நகரில் 'விருட்சம்' அமைப்பு சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.குடியிருப்பு பகுதி முழுவதும், தலைவர் பாலசுப்ரமணியம், செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியம், பொருளாளர் பிரதீப், சேவாபாரதி கோட்ட இணை செயலாளர் சுப்புராஜ், முன்னாள் வார்டு உறுப்பினர் சம்பத், சுதா, கார்த்தியாயினி, பிரணவ் ஸ்ரீ மற்றும் விருட்சம் அமைப்பு நிர்வாகிகள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.* அக்கரை செங்கப்பள்ளியில், பா.ஜ., சக்தி கேந்திர கூட்டம் மற்றும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. விவசாய அணி ஒன்றிய தலைவர் ரவி தலைமை வகித்தார். அப்துல்கலாம் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருடைய நினைவாக, பொதுமக்களுக்கு, கொய்யா, நெல்லி, அத்தி, செண்பகம் உட்பட, 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.பா.ஜ., வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், வடக்கு ஒன்றிய தலைவர் சத்யராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், பொதுச் செயலாளர் கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE