சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1,858 பேரும் மற்ற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 1,859 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,145 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 57,074 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,859 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,55,664 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,71,28,408 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,053 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,93,142 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,62,484 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,145 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,00,434 ஆக உயர்ந்துள்ளது.
28 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில்,7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,023 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE