சேலம்: ''பா.ஜ.,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவராக, மத்திய அமைச்சராகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார்,'' என்று, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.
சேலத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சிறுபான்மை அணி நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற கூட்டம் நடத்தி வருகிறோம். பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரானது என, தி.மு.க., - திருமாவளவன் உள்ளிட்டோர் துாண்டிவிட்டு, பகைமை பாராட்டும் சூழலை உருவாக்கியுள்ளனர்.

இதை உடைக்க, கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை சந்தித்து, பா.ஜ., சாதனை குறித்து விளக்குவோம். பா.ஜ.,வினர், இஸ்லாமியர் பகுதிகளில் ஓட்டு சேகரிக்க சென்றால், தி.மு.க., ஆட்சியும், போலீசாரும் தடுக்கின்றனர்.
திருமாவளவன் கட்சிக்கு தி.மு.க.,வில் மரியாதை இல்லை. பா.ஜ.,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவர், மத்திய அமைச்சராகவும் ஆகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE