புதுடில்லி-கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

ஆய்வுக் கூட்டம்கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேற்றைய அறிக்கை:தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 10 மாநிலங்களின் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தலைமையில் டில்லியில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இம்மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.

புதிய வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதன் வாயிலாக, 46 மாவட்டங்களில் தினந்தோறும் 10 சதவீதத்திற்கும் அதிக பாதிப்புகள் பதிவாகி வருவது தெரியவந்துள்ளது.தீவிர கட்டுப்பாடுமேலும், 53 மாவட்டங்களில் புதிய பாதிப்பின் அளவு 5 - 10 சதவீதமாக உள்ளது. இம்மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்காமல், தொற்று பரவலை தடுக்க தீவிர கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இப்பகுதிகளில் வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்போரில் 80 சதவீதத்தினர், வீடுகளில் தனிமையில் உள்ளனர். அவர்கள் வாயிலாக பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE