வேலுார்:கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த கோவிலில், செருப்பு அணிந்து பெண் டாக்டர்உட்கார்ந்ததால், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலுார் அருகே, பொய்கை பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் தடுப்பூசி முகாம் நடந்தது.வேலுார் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த ரெஜினா என்ற பெண் டாக்டர் செருப்பு அணிந்து, கோவில் கருவறை முன் அமர்ந்திருந்தார்.தடுப்பூசி போட வந்தவர்கள் மற்றும் பக்தர்கள், செருப்பை கழற்றி விட்டு வரும்படி அவரிடம் கூறினர்.அதற்கு டாக்டர், 'இங்கு செருப்பு அணிந்து வர வேண்டாம் என்று போர்டு வைத்துள்ளனரா' என, கேட்டுள்ளார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்டரை வெளியேற்றினால் தான், தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என அங்கு வந்தவர்கள் கூறினர்.இதனால், முகாமை விட்டு டாக்டர் ரெஜினா வெளியேறினார். பின், டாக்டர் ரெஜினா செய்த தவறுக்கு, நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அங்கிருந்த செவிலியர்கள் கூறியதால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE