சென்னை--குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, 'பப்ஜி' மதன் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

யு டியூப் சேனல்'கள் வாயிலாக, 'பப்ஜி' உள்ளிட்ட, 'ஆன்லைன்' விளையாட்டுகளை, ஆபாசமாக பேசியபடி விளையாடியது தொடர்பான புகாரில், பப்ஜி மதனை, மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீ சார் கைது செய்தனர்.பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், ஏராள மான புகார்கள் வந்ததால், அவரை, 'சைபர் சட்ட குற்றவாளி' எனக்கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, ஜூலை, 5ல், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மதன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து, தமிழக அரசு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர், நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE