வேலூர்: வேலூரில் போட்டியிட்ட, சுயேச்சை வேட்பாளர் மீது, மாவட்ட தேர்தல் அலுவலர் போலீசில் புகார் செய்தார். கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என, 70 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து, 25 நாட்களில் செலவின கணக்குகளை, வேலூர் தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும். இதில், 69 பேர் சமர்ப்பித்து விட்டனர். வேலூர் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்ட, வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், 40, தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பியும் பலனில்லை. இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான குமாரபாண்டியன் சார்பில், பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் தரப்பட்டது. இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, பன்னீர்செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE