கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கிய அரசு பள்ளி
கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கிய அரசு பள்ளி

கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கிய அரசு பள்ளி

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அதன்பின், மாணவர்களும், ஆசிரியர்களும் களத்தில் இறங்கி, பள்ளி வளாகத்தில், இயற்கை வகை கீரை, காய், கனிகள் தோட்டம், பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டனர்.பள்ளி வளாகத்தில் இருந்து பறிக்கப்படும் கீரை, காய்களை,
 கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கிய அரசு பள்ளி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அதன்பின், மாணவர்களும், ஆசிரியர்களும் களத்தில் இறங்கி, பள்ளி வளாகத்தில், இயற்கை வகை கீரை, காய், கனிகள் தோட்டம், பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டனர்.

பள்ளி வளாகத்தில் இருந்து பறிக்கப்படும் கீரை, காய்களை, தினசரி சத்துணவில் பயன் படுத்தி வந்தனர்.கொரோனாவால், இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கூடம் முடங்கிய போதும், ஆசிரியர்கள், மாணவர்கள் முடங்காமல், அங்கிருந்து தோட்டத்தை முறையாக பராமரித்து வருகின்றனர்.



தோட்டக்கலை, பாரம்பரிய மரங்களின் பலன்கள் மீது, மாணவர்கள் மத்தியில், ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்தந்த மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அறிவிப்பில், அந்த மரத்தின் வகை, மருத்துவ பயன்கள் இடம் பெற்றுள்ளன.



பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் கூறுகையில், ''மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி தோட்டக்கலை பராமரிப்பு, பாரம்பரிய மரங்கள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தேன். ''எதிர்பார்த்ததை விட மாணவர்கள் மிகுந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்,'' என, தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

Girija - Chennai,இந்தியா
18-ஆக-202107:50:54 IST Report Abuse
Girija போங்கப்பா.. நல்ல இருந்த காலத்தில ஒழுங்கா படிப்பு சொல்லி தரல, பல குழந்தைகளுக்கு அ ஆ இ கூட சொல்ல தெரியல , எழுதுவது என்பது சுத்தமாக தெரியவில்லை . ஆளில்லாத கடையில் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X