புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீர் என்பது ஒரு தனி நாடு. இந்தியாவும், பாகிஸ்தானும் அதை ஆக்கிரமித்துள்ளன' என, காங்., மூத்த தலைவர் மல்விந்தர் சிங் மாலி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. முதல்வருக்கும் முன்னாள் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சி தலைமை தலையிட்டு சமரசம் செய்தது. மேலும், கட்சியின் மாநில தலைவராக சித்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சித்துவின் நான்கு ஆலோசகர்களில் ஒருவரான மல்விந்தர் சிங் மாலி, சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், 'காஷ்மீர் ஒரு தனி நாடு. அது காஷ்மீரி மக்களுக்கு சொந்தமானது. இந்தியாவும், பாகிஸ்தானும் அதை ஆக்கிரமித்துள்ளன' என, அவர் குறிப்பிட்டார்.அவருடைய இந்த கருத்துக்கு அகாலி தளம், பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், காங்.,கைச் சேர்ந்த முதல்வர் அமரீந்தர் சிங் ஆதர வாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE